உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடைவீதி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

கடைவீதி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கடந்த, 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, 48 நாட்கள் பல்வேறு உபயோதாரர்கள் சார்பில், மண்டல பூஜை நடந்து வருகிறது. நாள்தோறும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழாவின் ஒரு நிகழ்வாக, நேற்று கோத்தகிரி ஸ்ரீ தாசபளஞ்சிக மகா ஜன சமூக நல சங்கத்தினரின் உபயமாக, சிறப்பு பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, மலர் அலங்கார வழிபாடு நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், பஜனை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், மகளிர் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை