உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆறுகளில் நீர் வரத்து அதிகம் குடிநீர் பிரச்னை இல்லை

ஆறுகளில் நீர் வரத்து அதிகம் குடிநீர் பிரச்னை இல்லை

கூடலுார், ;முதுமலை மசினகுடியில் ஆறுகளில் தொடரும் நீர் வரத்தால், குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வன கோட்டம், வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாகும். கடந்த ஆண்டு, பருவமழை நன்றாக பெய்தாலும், நடப்பு ஆண்டு கோடை மழை தாமதமானது.இதனால், கோடைக்கு முன்பாகவே வனத்தில் வறட்சியின் தாக்கம் அதிகரித்தது. வனப்பகுதி பசுமை இழந்து, வனவிலங்குகள் உணவு, குடிநீர் கட்டுப்பாடு ஏற்பட்டது. வறட்சியான பகுதிகளில் உள்ள சிமென்ட் தொட்டிகளில், வனத்துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் துவங்கிய கோடை மழை தற்போது வரை தொடர்வதால், வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது.மசினகுடி கெதரல்லா, சீகூர்ஹல்லா ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இதனால், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'நடப்பாண்டு கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்தது. வனவிலங்குகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோடையில் இதன் பாதிப்பு மேலும், அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது, தொடரும் கோடை மழையினால், வனப்பகுதி பசுமைக்கு மாறியதுடன், வனத்தீ அபாயமும், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !