உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடநாடு வழக்கில் இன்டர்போல் அறிக்கை வர காத்திருப்பு

கோடநாடு வழக்கில் இன்டர்போல் அறிக்கை வர காத்திருப்பு

ஊட்டி; 'கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, 'இன்டர்போல்' விசாரணை அறிக்கைக்கு காத்திருக்கிறோம்,' என, அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த, 7 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.நேற்று, மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய் நேரில் ஆஜரானார். அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, 'கொலை,கொள்ளை வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கூடுதல் கால அவகாசம் தர வேண்டும்,' என, நீதிபதியிடம் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஏப்., 25ம் தேதிக்கு, நீதிபதி முரளிதரன் ஒத்திவைத்தார்.அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில்,''கோடநாடு வழக்கு தொடர்பாக இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி., போலீசார் இவ்வழக்கு தொடர்பாக, 245 பேரிடம் விசார ணை நடத்தியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் கிடைக்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை