உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கால்பந்து விளையாடிய இளைஞர்கள்; திடீரென மைதானத்தில் புகுந்த யானை

கால்பந்து விளையாடிய இளைஞர்கள்; திடீரென மைதானத்தில் புகுந்த யானை

பந்தலுார் ; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பள்ளி நேரம் முடிந்ததும் இளைஞர்கள் கால்பந்து விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மைதானத்திற்குள் காட்டு யானை திடீரென ஓடி வந்தது. விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் யானை வருவதை பார்த்ததும், அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.நெலக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இந்த யானை அடிக்கடி உலா வருவதுடன், கடந்த வாரம் ஒரு காரை தாக்கி சேதப்படுத்தியது. எனவே, இந்த யானையை அடர்த்தியான வனப்பகுதிகள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை