உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வலையில் சிக்கிய ஆமைக்கு மறுவாழ்வு அளித்த மீனவர்கள்

வலையில் சிக்கிய ஆமைக்கு மறுவாழ்வு அளித்த மீனவர்கள்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடபட்டது.தொண்டி அருகே முள்ளிமுனையை சேர்ந்த மீனவர்கள் ஹனிபா, பால்கனி, மணி ஆகியோர் நேற்று அதிகாலை நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களின் வலையில் 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இது குறித்து மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் அறிவுரைப்படி ஆமையை மீண்டும் கடலில் விட்டனர்.மீனவர்கள் கூறுகையில் ' தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவற்றை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம். சிக்கியது சித்தாமை வகையை சேர்ந்தது. அதனால் வலை சேதமடைந்தது 'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை