உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் கொடியேற்றம்

அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் கொடியேற்றம்

பரமக்குடி : பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் ராம நவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கோயிலில் நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு ராமர், சீதை, லட்சுமணன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது ராமர், சீதை, லட்சுமணன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர். இரவு 7:00 மணிக்கு வாமன அவதாரத்தில் ராமர் வீதி உலா வந்தார். தொடர்ந்து தினமும் காலை அபிஷேகமும், இரவு காளிங்க நர்த்தனம், பாண்டுரங்கன், கூடலழகர், கள்ளழகர், தவழும் கண்ணன், இரு கருட சேவை என அருள்பாலிக்க உள்ளார்.ஏப்.16 மாலை 6:00 மணிக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் ராம ஜனனம் கோலாகலமாக நடக்க உள்ளது. ஏப்.18 காலை 10:15 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், 11:30 மணிக்கு கோதண்டராமசாமி, சீதாலட்சுமி பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏப்.19 தீர்த்தவாரி நடந்து இரவு கொடி இறக்கம் நடக்கிறது.மேலும் ஏப்.20ல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு புஷ்ப கேடயத்தில் வீதி உலாவும் வருகிறார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா தலைமையில் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ