மேலும் செய்திகள்
யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம்
04-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. ஏழாம் நாளான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார். முன்னதாக அலங்காரம் செய்யப்பட்ட மூலவர் மற்றும் உற்ஸவருக்கு நடந்த அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தெருக்களில் பெண்கள் மாக்கோலமிட்டு விநாயகரை வரவேற்றனர்.
04-Sep-2024