உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாசி அமாவாசை: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

மாசி அமாவாசை: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம்:மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா பிப்.,18ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 10ம் நாள் விழாவான நேற்று மாசி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள்.பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 1:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை