முளைப்பாரி, பொங்கல் உற்ஸவ விழா
கடலாடி : கடலாடி இந்திரா நகர் சந்தன மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. ஆக., 23ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு ஏராளமான பெண்கள் சன்னதி முன்பு பொங்கல் வைத்தனர். மஞ்சள் நீராட்டுதலும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.