உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை கெடுபிடியால் பீதியில் 40 சதவீத மீனவர்கள் மீன்பிடிப்பு

இலங்கை கெடுபிடியால் பீதியில் 40 சதவீத மீனவர்கள் மீன்பிடிப்பு

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கெடுபிடியால் பீதி யடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 40 பேர் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர். நவராத்திரி திருவிழாவை யொட்டி மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்ததால், செப்.,24 முதல் ராமேஸ்வரத்தில் கனரக படகின் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர். இந்நிலையில் அக்.,2ல் விழா முடிந்ததும் மீனுக்கு மவுசு அதிகரித்தது. இதனால் 10 நாட்களுக்கு பின் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லோரும் மீன்பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் 600 விசைப்படகுகளில் 240 படகில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். சமீப நாட்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து பல மாதங்களாக சிறையில் அடைக்கின்றனர். மேலும் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் அபராதம், சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதிப்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பீதி அடைந்தனர். இதனால் நேற்று 40 சதவீதம் படகில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீதமுள்ள 60 சதவீதம் படகுகளை கரையில் நிறுத்தினர். இதனால் மீனவர் இளைஞர்கள் பலரும் கன்னியாகுமரி, கேரளாவுக்கு வேலை தேடி சென்றதாக மீன வர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை