உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் 7 பேர் கைது

மீனவர்கள் 7 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 456 விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை விரட்டினர்.அப்போது, ஈசக்பவுல் என்பவரது படகிலிருந்த ஏழு மீனவர்களை கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.நேற்று முன்தினம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்த போது, இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலை கொண்டு படகின் பின்பகுதியில் மோதினர். இதில், படகு சேதம் அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை