உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அருகே 700 ஆண்டு பழமையான பைரவர் சிலை

பரமக்குடி அருகே 700 ஆண்டு பழமையான பைரவர் சிலை

பரமக்குடி : பரமக்குடி அருகே மாங்குடியில் கண்டெடுக்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான பைரவர் கல் சிலையை அப்பகுதி மக்கள் அம்மனாக கருதி வழிபடுகின்றனர்.பரமக்குடி அருகே வழிமறிச்சான் ஊராட்சி மாங்குடியில் பழமையான அம்மன் சிலை இருப்பதை தொல்லியல் ஆர்வலர் சிவா கண்டறிந்தார்.இச்சிலை குறித்து மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வரலாற்றுத்துறை தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கள ஆய்வு செய்தனர். பின் அவர்கள் கூறியதாவது: இச்சிலை பிற்கால பாண்டியர்களின் 13 அல்லது 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிலை. சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர் வடிவம் ஒன்று. இச்சிலையானது கிழக்கு நோக்கி நிர்வாண கோலத்தில் நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது.வலது கரத்தில் உடுக்கை, பின் இடது கரத்தில் பாசக் கயிறு மற்றும்சூலாயுதம் இருக்கும் முன்பக்க வலது கரம் சிதைந்துள்ளது. முன் இடது கரத்தில் கபாலம் மற்றும் தலையின் பின்புறம் தீச்சுடர் காணப்படுகிறது. உடலில் ஆபரணங்கள் தெளிவாக தெரியாத நிலையில் இந்த பைரவரை கிராமத்தினர் அம்மனாக வழிபடுகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை