மேலும் செய்திகள்
அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடல்
04-Aug-2025
ராமேஸ்வரம்:ஆவணி அமாவாசையில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று ஆவணி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
04-Aug-2025