உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் விழாவில் நடந்த மாட்டு வண்டி பந்தயம்

கோயில் விழாவில் நடந்த மாட்டு வண்டி பந்தயம்

கடலாடி: கடலாடி அருகே தானியங்கூட்டம் கிராமத்தில் உள்ள வனப்பேச்சி அம்மன்-ராக்காச்சி அம்மன் கோயிலில் 15 ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற காளைகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன.கடலாடி - முதுகுளத்தூர் சாலையில் பந்தய துாரம் நிர்ணயம் செய்யப்பட்டு நடந்த பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. வண்டி ஓட்டிய சாரதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான கிராம மக்கள் வரிசையாக நின்று ஆர்வமுடன் மாட்டுவண்டி பந்தயத்தை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ