உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதல்வர் கோப்பை கபடி போட்டி; திருவாடானை கல்லுாரி முதலிடம் 

முதல்வர் கோப்பை கபடி போட்டி; திருவாடானை கல்லுாரி முதலிடம் 

திருவாடானை; ராமநாதபுர மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டியில் திருவாடானை அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் முதலிடத்தில் வென்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது. மாணவர்களுக்கான கபடி போட்டியில் 19 கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாடானை அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் முதலிடத்தில் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து மகளிருக்கான கபடி போட்டி நடந்தது. இதில் திருவாடானை அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை திருவாடானை கல்லுாரி முதல்வர் பழனியப்பன், உடற்கல்வி இயக்குநர் செல்வம் பாராட்டினர். மாநில அளவில் நடக்கும் போட்டியில் இக்கல்லுாரி சார்பில் முகுல், சுபாஷ், சந்தோஷ், மோகித், ரெத்தினம் ஆகிய ஐந்து மாணவர்களும், பிரியங்கா, பேபிஷாலினி, அம்பிகா ஆகிய மூன்று மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை