நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், ஏ.ஆர்.மங்கலத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளின் பாதுகாப்பு குறித்தும், ஆய்வு செய்தார்.இதுவரை மாவட்டத்தில் 1537.960 டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.