சகதியில் சிக்கிய பசு மாடு மீட்பு
திருவாடானை : திருவாடானை அருகே என்.மங்கலத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு சொந்தமான பசுமாடு கிராமத்தில் உள்ள கண்மாய்க்குள் இறங்கிய போது சகதியில் சிக்கிக் கொண்டது. கிராம மக்கள் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் உத்தண்டசாமி தலைமையிலான வீரர்கள் சென்று மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.