ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம்: -விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி, கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். அதிகமான வாகனங்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.