இந்திரா நகர் பகுதியில் நாய்களின் தொல்லை
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் அப்பகுதிக்கு அதிகளவில்பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. ரோடுகளில் குறுக்கே ஓடுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.