விவசாய மின் மோட்டாரை பகலில் இயக்க மின்வாரியம் வலியுறுத்தல்
ராமநாதபுரம்; இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்தவேண்டும் என ராமநாதபுரம் மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் திலகவதி கூறியிருப்ப தாவது: ராமநாதபுரம் கோட்டத்தில் பகலில் இலவசமாககிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளிமின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம்பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்க முடியும். நமது நாடு பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில் பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளிமின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் இயன்ற வரை தங்களது விவசாயமின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.