சுற்றுச்சூழல் பயிலரங்கம்
திருவாடானை; தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அழகப்பா பல்கலை சார்பில் தொண்டி கடலோர கல்லுாரியில் சுற்றுச்சூழல் சவால்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் மண்டல அளவிலான பயிலரங்கம் நடந்தது. அறிவியல் இயக்க தலைவர் லியோன் தலைமை வகித்தார். கல்லுாரி துறைத்தலைவர் ரவிக்குமார் துவக்கி வைத்தார். கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.