மகளை பலாத்காரம் செய்ததந்தைக்கு 20 ஆண்டு சிறை
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பழநிவலசையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தேவிபட்டினம் அருகே பழநிவலசையை சேர்ந்தவர் 35 வயது கூலித்தொழிலாளி. இவர் தனது 8 வயது மகளை தென்னந்தோப்பில் வைத்து 2023 ஆக.,11 ல் பாலியல் பலாத்காரம் செய்தார். ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். பின் ஜாமினில் வெளியே வந்தார்.இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.