உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 1250 கிலோ பீடிஇலை பறிமுதல் இலங்கையில் நால்வர் கைது

1250 கிலோ பீடிஇலை பறிமுதல் இலங்கையில் நால்வர் கைது

ராமநாதபுரம்:- தமிழகத்தில் இருந்து இலங்கை மன்னார் மாவட்டம் நடுக்குடா கடற்கரைக்கு கடத்திவரப்பட்ட 1250 கிலோ பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்யப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக அந்நாட்டு கடற்படை புலனாய்வுப்பிரிவுக்குகிடைத்த தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இரு துறையினரும் இணைந்து மன்னார் மாவட்டம் நடுக்குடா கடற்கரை பகுதியில் சோதனையிட்டனர். இரு படகுகளில் 40 பண்டல்களில் 1250 கிலோ பீடி இலை இருந்ததை பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் ஈடுபட்ட கல்பிட்டி பகுதியை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பீடி இலையின் மதிப்பு ரூ. 30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை