உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் கருட வாகன சேவை

பெருமாள் கோயிலில் கருட வாகன சேவை

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசையில் நேற்று முன்தினம் இரவு கருட வாகன சேவை நடந்தது. பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் பெருமாள் கோயில் சன்னதியில் உள்ள கருப்பண சுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !