பொது வேலை நிறுத்தம் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தம் ஜூலை 9ல் நடத்துவதற்கான ஆலோனை கூட்டம் நடந்தது.மத்திய அரசின் தொழிலாளர், மக்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜூலை 9ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இது குறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.தொ.மு.ச., மாவட்ட செயலாளர் மலைக்கண்ணு தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட துணைச்செயலாளர்கள் பாஸ்கரன், வாசுதேவன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத்தலைவர் லோகநாதன் பங்கேற்றனர்.மதுரையில் நடக்கும் அனைத்து சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது. அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவை ஜூன் 25 ல் நடத்துவது. விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள், வாலிபர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், மாதர் சங்கங்களை பங்கேற்றக வைப்பது. ஜூலை 5 ல் தெருமுனை பிரசாரம் செய்வது. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, திருவாடானை, முதுகுளத்துார் ஆகிய மையங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.