விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஹிந்து முஸ்லிம் பங்கேற்பு
கமுதி:கமுதி அருகே அபிராமத்தில் நவசக்தி விநாயகர் கோயிலில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் பங்கேற்றனர். தினந்தோறும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது. கோயில் முளைக்கொட்டு திண்ணையில் முளைப்பாரி வைத்து ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் சிலையை வைத்து பெண்கள் முளைப்பாரி துாக்கி அபிராமம் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தை நகர செயலாளர் ஜாகீர் உசேன் துவக்கி வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் மாரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முளைப்பாரியை தண்ணீரில் கரைத்தனர். ஊர்வலத்தில் ஹிந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு இணைந்து கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.