உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மூதாட்டி மரணத்தில் சந்தேகம் பணிப்பெண்ணிடம் விசாரணை

பரமக்குடியில் மூதாட்டி மரணத்தில் சந்தேகம் பணிப்பெண்ணிடம் விசாரணை

பரமக்குடி: பரமக்குடியில் மூதாட்டி இறந்த நிலையில் நகைகள் காணாமல் போனதால் வீட்டு பணிப்பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஞான சவுந்தரி 92. இவரது மகன்கள், மகள்கள் வெளியூரில் உள்ள சூழலில் தனியாக வசித்தார். இவரை பராமரிக்க இலங்கை அகதியான குளித்தலை அன்னலட்சுமி பணியாளராக உள்ளார்.வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வரை இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். நேற்று காலை மூதாட்டி படுக்கையில் இறந்து கிடந்த நிலையில் பணிப்பெண் தகவலின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டி அணிந்திருந்த ஏழரை பவுன் தங்கச் செயின், தோடு காணாமல் போனதாக கூறிய நிலையில் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பணிப்பெண்ணிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.உடல் பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !