ராமநாதபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
ராமநாதபுரம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்களில் அபிேஷகம், வழிபாடு மற்றும் கிறிஸ்துவ சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ஆங்கில புத்தாண்டு 2025 பிறப்பை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணியை கடந்தவுடன் கேக் வெட்டி கொண்டாடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறினர்.ராமநாதபுரம் துாய ஜெபமாலை அன்னை சர்ச், சி.எஸ்.ஐ., ரேமா சரச் ஆகிய சர்ச்களில் அதிகாலை 12:00 மணிக்கு மேல் நடந்த திருப்பலியில் பங்கேற்றனர். குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடுமுருகன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், குமரய்யா கோயில், அல்லிக்கண்மாய் ரோடு ராஜமாரியம்மன் கோயில், சந்தைகடை ரோடு வல்லபை விநாயகர் கோயில், ரயில்வே பீடர் ரோட்டில் வெட்டுடையாள் காளியம்மன்.கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர் கோயில், மல்லம்மாள் காளியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி சிதம்பரேஸ்வரர், உந்திபூத்தபெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பல்வேறு கோயில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் அபிேஷகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓரியூர் புனித அருளானந்தர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.*சாயல்குடி நேதாஜி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் செல்வ விநாயகருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.