மேலும் செய்திகள்
அருளானந்தர் ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
03-Feb-2025
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் அருளானந்தர் சர்ச் 332 வது மறைசாட்சி விழா ஜன.27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. மிக்கேல் அதிதுாதர், செபஸ்தியார், சவேரியார், புனித அருளானந்தர், ஆரோக்கிய அன்னை ஆகிய ஐந்து தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிகபட்டிருந்தது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
03-Feb-2025