கமுதி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
கமுதி: கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து 14,15வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டு வெள்ளையாபுரம், 15வது வார்டு சிங்கப்புலியாபட்டிக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரியும், தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பகுதிகளில் உள்ள பணிகளுக்கு மாற்றி விடப்பட்டதாகவும் கூறி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுன்சிலர்கள் சத்யா (14 வது வார்டு), திருக்கம்மாள் (15 வது வார்டு) தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலரை மற்றும் பேரூராட்சித் தலைவர் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.