உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கஞ்சா கடத்தல் போலீசார் தீவிர கண்காணிப்பு

இலங்கைக்கு கஞ்சா கடத்தல் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவாடானை: ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கடத்துவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் கஞ்சா விளைச்சல் அமோகமாக இருப்பதால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து கடத்தி வந்து மதுரை வழியாக ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துகின்றனர். ஜூன் 22 இரவு தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வேனில் கொண்டு வந்த 90 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டை மணமேல்குடியை சேர்ந்த ராஜமாணிக்கத்தை 61, கைது செய்தனர்.அவரது தகவலின் பேரில் அவரது மருமகன் ஆனந்தராஜ் வீட்டில் 42 பார்சல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.போலீசாரின் விசாரணையில் ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி மதுரை வழியாக இப்பகுதிக்கு வந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. தொண்டி அருகே பாசிபட்டினம் மற்றும் மதுரையை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ