சாயல்குடியில் போலீசாருக்கு குடியிருப்பு வசதி தேவை
சாயல்குடி: சாயல்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகே 1952ல் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு சேதமடைந்த நிலையில் உள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள கட்டடத்தால் போலீசார் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சேதமடைந்த நிலையில் பயன்பாடில்லாத ஓட்டு கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு போலீஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீசார் குடியிருப்பு இல்லாததால் சாயல்குடி நகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பணி செய்கின்றனர்.