உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவ.20க்குள் பாம்பன் புதிய பாலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நவ.20க்குள் பாம்பன் புதிய பாலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நவ.,20க்குள் திறந்து வைக்கிறார்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகளும், பாலத்தின் நடுவில் ஆசியாவில் முதல் முறையாக கடலில் அமைக்கப்பட்ட லிப்ட் முறையிலான துாக்கு பாலம் பொருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.பாலத்தில் இரு கட்டமாக காலி சரக்கு ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம், துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனையும் நடத்தப்பட்டது. இச்சோதனைகள் வெற்றி பெற்றன. சமீபத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் பாலத்தின் பணிகள் 100 சதவீதம் முடிந்து விட்டதாக தெரிவித்தார்.அக்.30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன் பின் நவ.20க்குள் புதிய பாலம் திறப்பு விழாவை நடத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்பு

110 ஆண்டு பழமையான பாலத்திற்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பாம்பன் அருகே அக்காள்மடம் அல்லது ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மேடை அமைக்க ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்க அரியாங்குண்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தையும் தேர்வு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க இருப்பது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை