மேலும் செய்திகள்
ஜன.4ல் வேலைவாய்ப்பு முகாம்
01-Jan-2025
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பரமக்குடி அரசு கலை கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர். கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 149 தனியார் நிறுவனத்தினர் பங்கேற்ற நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் திருமலை செல்வி, மகளிர் திட்ட இயக்குனர் சித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார், கல்லுாரி முதல்வர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
01-Jan-2025