உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம்,:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஜூன் 30ல் ராமேஸ்வரத்தில் இருந்து டேரிக் என்பவரது விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 7 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.இவர்களை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என ஆவலுடன் எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை