ரோட்டோர ஆபத்து
ஆர்.எஸ்.மங்கலம்: கொக்கூரணியில் இருந்து ஆயங்குடி செல்லும் ரோட்டின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் இருபுறங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.