உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.14 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.14 கோடி காணிக்கை

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்த காணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 707 ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்களை கோயில் ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை ஊழியர்கள் சேகரித்தனர். பின் காணிக்கைகளை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 707 ரூபாயும், தங்கம் 61 கிராம், வெள்ளி 3 கிலோ 200 கிராம் என கிடைத்த காணிக்கை தமிழக அரசின் வருவாயாக சேர்ந்தது. உதவி ஆணையர் ரவீந்திரன், கோயில் ஆய்வாளர் சிவக்குமார், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, சிவனடியார்கள் குழு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ