கடற்பாசி பூங்கா கட்டுமான பணிகள்: மீனவர் நலத்துறை செயலாளர் ஆய்வு
ராமநாதபுரம்: திருப்பாலைக்குடி ஊராட்சி வளமாவூரில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து மண்டபம் மத்திய கடல் நீர் ஆராய்ச்சி நிலையத்தில் கடற்பாசி வளர்ப்பு மையத்தில் ஆய்வு செய்து மகளிர் குழுக்களுக்கு கடற்பாசி விதைகளை வழங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடி இறங்குதளம் தங்கச்சிமடத்தில் புதிதாக அமையவுள்ள மீன்பிடி இறங்கு தளத்திற்கான மேம்பாட்டு பணிகள், பாம்பன் குந்துகால் மற்றும்பாம்பன் வடக்கு பகுதியில் துாண்டில் வளைவு பணிகளையும் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.