/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை முன் அடர்ந்து வளர்ந்த சீமைக்கருவேலம்
கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை முன் அடர்ந்து வளர்ந்த சீமைக்கருவேலம்
கடலாடி: கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை முன்பு சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நோயாளிகள் அச்சப்படுகின்றனர். கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி மற்றும் முன்புற வளாகங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே கருங்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் 100 நாள் பணியாளர்களை பயன்படுத்தி சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகே உள்ள பயணியர் நிழற்குடையில் கால்நடைகளின் கழிவுகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.