கமுதியில் குறுவட்டார விளையாட்டு போட்டி
கமுதி: கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி அலுவலர் வசந்தி, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 38 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14, 17, 19 வயது பிரிவுகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட ஏராளமான போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உடன் கமுதி வட்டாரத்திற்குட்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் இருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் சாரதாதேவி நன்றி கூறினார்.