உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி கடலில் படகு மூழ்கியது 4 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

தனுஷ்கோடி கடலில் படகு மூழ்கியது 4 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்:சூறாவளியால் தனுஷ்கோடி கடலில் மீன்பிடித்த நாட்டுப்பகு மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.நேற்று காலை தனுஷ்கோடியில் இருந்து குமார் என்பவரது நாட்டுப்படகில் மீனவர்கள் நம்பு பிரகாஷ் 23, நம்புகுளன் 25, கே.நம்பு பிரகாஷ் 24, சத்யராஜ் 25, ஆகியோர் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதில் படகு கடலுக்குள் மூழ்கியது. மீனவர்கள் 4 பேரும் மிதவை உதவியுடன் நீந்தி கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீட்டு தலைமன்னார் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களை மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்று (ஜூன் 26) அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை