உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் கடலில் விடப்பட்டது

மீனவர் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் கடலில் விடப்பட்டது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் கடலில் விடப்பட்டது.தொண்டி அருகே சோலியக்குடியைச் சேர்ந்த ராமக்கண்ணன் விசைபடகில் மீனவர்கள் சிவபாலன், ஜெயகணேஷ், முத்து ஆகியோர் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 100 கிலோ எடையுள்ள அரிய வகையான கடல் ஆமை சிக்கியது. இதுகுறித்து மரைன் போலீசாருக்கு மீனவர்கள் தெரிவித்தனர்.போலீசார் ஆமையை உயிருடன் கடலில் விட அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் ஆமையை உயிருடன் கடலில் விட்டனர்.மீனவர்கள் கூறியதாவது: தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆமையை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம். தற்போது வலையில் சிக்கிய ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை