குப்பை அகற்ற வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர், பகுதியில் ரோட்டோரத்தில் குடியிருப்பு பகுதி குப்பை, வர்த்தக நிறுவனங்களின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், குப்பை கொட்டுவதை தடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.