உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலிராணிப்பேட்டை, ராணிப்பேட்டை அருகே, நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி, மின்சாரம் தாக்கி பலியானார். ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர், 46. இவருக்கு சொந்தமான அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு, நேற்று அதிகாலை நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, விவசாய பம்பு செட்டில் மின் மோட்டாருக்கு செல்லும், பீஸ் கேரியரில் பழுது ஏற்பட்டிருந்ததால், அதை சரி செய்து மீண்டும் பீஸ் கேரியரை பொருத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை