குறை தெரிவிக்க வருவோருக்குமனு எழுதித்தர நடவடிக்கை
குறை தெரிவிக்க வருவோருக்குமனு எழுதித்தர நடவடிக்கைசேலம்:சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனு அளிக்க வரும் மக்களின் வசதிக்கு கலெக்டர் அலுவலக தரை தளத்தில் வருவாய், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால், கட்டணமின்றி மனுக்கள் எழுதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை, மனு அளிக்க வரும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மனுக்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்து ரசீது வழங்குவதோடு, தொடர்புடைய அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.