மர்ம விலங்கு கடித்துவெள்ளாடு பலி
மர்ம விலங்கு கடித்துவெள்ளாடு பலிஓமலுார்:காடையாம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்த, விவசாயி மனோகரன், 43. இவர் வெள்ளாடுகளை வளர்க்கிறார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சத்தம் கேட்டு வெளியே வந்து மனோகரன் பார்த்தபோது, ஒரு வெள்ளாடு காயமடைந்து இறந்து கிடந்தது. மற்றொரு ஆட்டுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் பார்வையிட்டு, நாய்கள் கடித்திருக்கலாம் என தெரிவித்தனர். பலியான ஆடு, 10,000 ரூபாய் மதிப்பு என்பதால், நிவாரணம் வழங்க, மனோகரன், வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.