| ADDED : ஆக 25, 2026 06:16 AM
ஏற்காடு; ஏற்காட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய-லாளர் நேரு தலைமையில், மக்களுக்கு அடிப்-படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.நிர்வாகிகள் ஜோதி, சாந்தி, மரகதமோனா முன்-னிலையில், ரஒண்டிக்கடை ரவுண்டானாவில் இருந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். இதில் முருகன் நகர் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் பணியை நிறைவு செய்ய வேண்டும். அனைத்து கிராமங்க-ளுக்கும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கொட்டசேடு புலிக்குத்தி ராமர் நகருக்கு சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராம-மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் பிரவின் குமார், தேவி ஆகியோர் பேசினர். பின்னர், பி.டி.ஓ., ஜெயாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.