உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வசதிகளை கேட்டறிந்து உயர்கல்வியில் சேர அறிவுரை

அடிப்படை வசதிகளை கேட்டறிந்து உயர்கல்வியில் சேர அறிவுரை

வாழப்பாடி, 'நான் முதல்வன்' திட்டத்தில், உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கம், வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது: வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, ஆத்துார், தலைவாசல் வட்டார மாணவ, மாணவியர் பயன்பெற, இந்த கருத்தரங்கம் நடக்கிறது. பல்வேறு காரணங்களால், உயர்கல்வி படிக்க இயலாத, 66 மாணவ, மாணவியர், இதில் பங்கேற்றுள்ளனர். அனைத்து மாணவ, மாணவியரிடம் தனித்தனியே அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உயர்கல்வியில் சேர்வதற்கான அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி கடன் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கு உதவ, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, மாவட்ட நிர்வாகத்தால் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. மாணவ, மாணவியர், 97888 58931, 99420 31640 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், தாசில்தார் ஜெயந்தி உள்ளிட்ட அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.]


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி