மேலும் செய்திகள்
25 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
16-Sep-2025
கருமந்துறை, கருமந்துறை போலீசார், கிளாக்காடு வனத்துறை சோதனைச்சாவடி அருகே, கருமந்துறை - வில்வனுார் சாலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியே, ஸ்பிளண்டர் பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அவரது பைக் கவரில், இரு பிளாஸ்டிக் பொட்டலங்களில், 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில், தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்த கதிர்வேல், 32, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சாவை, பைக்குடன் பறிமுதல் செய்தனர்.
16-Sep-2025