அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆத்துார், ஆத்துார், வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு போதிய அளவில் கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லை என, மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.நேற்று, இந்திய மாணவர் சங்க, மாவட்ட செயலர் பெரியசாமி தலைமையில், கல்லுாரி நுழைவாயில் முன், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் டார்வின், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.